காதலிக்கச் சொல்லி 15 வயது சிறுமியை தொந்தரவு செய்து மிரட்டிய இளைஞர் கைது

0 3409
காதலிக்கச் சொல்லி 15 வயது சிறுமியை தொந்தரவு செய்து மிரட்டிய இளைஞர் கைது

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே காதலிக்க மறுத்த 15 வயது சிறுமியை அவருக்கே தெரியாமல் புகைப்படம் எடுத்து மார்பிங் எடிட் செய்து வெளியிட்டுவிடுவதாக மிரட்டிய இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

ஒட்டர்கரட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான நந்தகுமார் என்ற அந்த இளைஞர், சிறுமி கூட்டுறவு பால் பண்ணைக்கு பால் ஊற்ற தனது சைக்கிளில் செல்லும் போது அவரை பின் தொடர்ந்து சென்று தன்னை காதலிக்குமாறு கூறி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் சிறுமிக்கே தெரியாமல் அவரை புகைப்படம் எடுத்த நந்தகுமார், போட்டோக்களை ஆபாசமாக சித்தரித்து நண்பர்களுக்கு அனுப்பி விடுவேன் என்றும், பெற்றோர்களிடம் கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் அச்சமடைந்த சிறுமி, தனது பெற்றோரிடம் கூறியிருக்கிறார். சிறுமியின் பெற்றோர் கோபிசெட்டிப்பாளையம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், நந்தகுமாரை போலீசார் கைது செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments