கஞ்சா விற்பனை செய்தவனை பிடிக்க சென்ற காவலர்கள் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு

0 3681
கஞ்சா விற்பனை செய்தவனை பிடிக்க சென்ற காவலர்கள் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு

ராணிப்பேட்டையில் கஞ்சா விற்றவனை பிடிக்கச் சென்ற காவல்துறையினர் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் 2 காவலர்கள் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.

அரக்கோணம் திருமலை ஆச்சாரி தெருவில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அந்த வீட்டை அடையாளம் காட்டுவதற்காக ஒரு நபரை அழைத்துக்கொண்டு 2 காவலர்கள் சென்றனர்.

தன்னைதேடி காவல்துறையினர் வருவதை அறிந்த ரியாஸ் என்ற அந்த இளைஞன்  நாட்டு வெடிகுண்டை காவலர்கள் மீது வீசிவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் படுகாயமடைந்த 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தப்பியோடிய ரியாஸ் கைது செய்யப்பட்டதுடன் அவன் வைத்திருந்த 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments