மின்வழங்கலை உறுதி செய்யும்படி அனைத்து மாநிலங்களுக்கும், மின்வழங்கல் நிறுவனங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல்

0 1719
மின்வழங்கலை உறுதி செய்யும்படி அனைத்து மாநிலங்களுக்கும், மின்வழங்கல் நிறுவனங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல்

நாடுதழுவிய வேலைநிறுத்தத்துக்குத் தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில் மின்வழங்கலை உறுதி செய்யும்படி அனைத்து மாநிலங்களுக்கும், மின்வழங்கல் நிறுவனங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மத்திய மின்சார அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தில் மார்ச் 28, 29 ஆகிய இரு நாட்களும் பொதுவேலை நிறுத்தத்துக்குத் தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளதைக் குறிப்பிட்டுள்ளது.

இதனால் மின்னுற்பத்தி நிலையங்கள், மின் தடங்கள், துணை மின் நிலையம் ஆகியவற்றில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு மின்சார வழங்கலை உறுதி செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளது.

பராமரிப்புப் பணிக்காக மார்ச் 28, 29 ஆகிய நாட்களில் ஏற்கெனவே திட்டமிட்ட மின்தடையை வேறு நாட்களுக்கு மாற்றும்படியும் அறிவுறுத்தியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments