கள் இறக்க போலீசார் ரூ.10 ஆயிரம் மாமூல் வாங்கிய விவகாரம்.. 3 காவலர்களை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து தூத்துக்குடி எஸ்.பி உத்தரவு

0 2080
கள் இறக்க போலீசார் ரூ.10 ஆயிரம் மாமூல் வாங்கிய விவகாரம்.. 3 காவலர்களை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து தூத்துக்குடி எஸ்.பி உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பனைமரங்களில் கள் இறக்க போலீசார் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கூறப்படும் விவகாரத்தில், 3 காவலர்களை ஆயுதப்படைக்கு மாற்றி தூத்துக்குடி எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.

கொப்பம்பட்டியில் சட்டவிரோதமாக கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, அங்கு சோதனையிடச் சென்ற தனிப்படை போலீசார் அங்கிருந்த பனை ஏறும் தொழிலாளியான சண்முகவேலிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர், தான் மாதந்தோறும் 10 ஆயிரம் ரூபாய் மாமூலாக கொப்பம்பட்டி காவலர்கள் முத்துபாண்டி, ராஜ்குமார் ஆகியோருக்கு வழங்குவதாக கூறினார்.

இது தொடர்பான வீடியோ வெளியாகி வைராலான நிலையில், காவலர்கள் முத்துபாண்டி, ராஜ்குமார் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும், விசாரணை வீடியோவை வெளியிட்டதாக தனிப்படை காவலர் ஸ்ரீராமும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments