ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கடத்த முயன்ற 2 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்.. 6 பேர் கைது.!

0 1900

ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கார் மற்றும் லாரியில் கடத்த முயன்ற, சுமார் 2 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட 6 பேரைக் கைது செய்தனர்.

திருப்பதி - ஊத்துக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக வந்த கார் மற்றும் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில், 145 செம்மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்ததை அடுத்து, செம்மரக்கட்டைகளுடன் சேர்த்து லாரி மற்றும் காரையும் பறிமுதல் செய்த போலீசார், 6 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்களுள் 4 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பதும் 2 பேர் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments