பிர்பும் அருகே 40 நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றிய போலீசார்..!

0 1461

மேற்கு வங்கம் பிர்புமில் 8 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்த ராம்பூர்ஹட் கிராமம் அருகே 40 நாட்டு வெடி குண்டுகளை கைப்பற்றியதாக மாவட்ட எஸ்.பி. தெரிவித்துள்ளார்.

ராம்புர்ஹட் கிராமம் அருகே கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருந்த பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

பெண்கள், குழந்தைகள் உள்பட 8 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில் சம்பவம் நடந்த கிராமத்தில் அண்டையில் நாட்டு வெடிகுண்டுகள் போலீசார் கைப்பற்றியது அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

தாக்குதல் நடத்த சமூக விரோதிகள் திட்டமிட்டு இருந்தனரா என விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments