நாகப்பட்டினத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் மூட்டைக்கு ரூ.40 லஞ்சம் வாங்கும் ஊழியரின் வீடியோ காட்சிகள்.!

0 1216

நாகப்பட்டினம் மாவட்டம் பிரதாபராமபுரம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பட்டியல் எழுத்தர் ஒருவர் விவசாயிகளிடம் மூட்டைக்கு 40 ரூபாய் லஞ்சம் வாங்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

தெற்கு பொய்கை நல்லூரைச் சேர்ந்த விவசாயி இளங்கோ என்பவர் தன்னுடைய நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதற்கு நிலையம் சென்றுள்ளார்.

அவரிடம் இருந்த 48 மூட்டைகளை கொள்முதல் செய்த ஊழியர்கள் மூட்டை ஒன்றுக்கு 40 ரூபாய் என ஆயிரத்து 940 ரூபாய் பணம் கேட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த இளங்கோ லஞ்ச பணத்தை கொடுக்கும் போது வீடியோ எடுத்து அதனை சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments