ரஷ்ய அதிபர் புதின் அதிகாரத்தில் நீடிக்கக் கூடாது - ஜோ பைடன்

0 2475

ரஷ்ய அதிபர் புதின் அதிகாரத்தில் நீடிக்கக் கூடாது என்றும் ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரள வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போலந்து நாட்டில் நிகழ்த்திய உரையில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெள்ளை மாளிகை விடுத்த அறிக்கையில் புதினை ரஷ்ய அதிபர் பதவியில் இருந்து நீக்குவது நோக்கமில்லை. அவர் அண்டை நாடுகளின் மீது அதிகாரம் செலுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று தான் ஜோபைடன் அவ்வாறு பேசியதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

போலந்து அதிபர் ஆண்ட்ரேஸ் டூடாவுடன் வார்சாவில் பேச்சுவார்த்தை நடத்தினார்.நேட்டோ கூட்டு நாடுகளை ரஷ்யா தாக்க முற்பட்டால் பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் ஜோ பைடன் அப்போது உறுதியளித்தார்.

நேட்டோ நாடுகளின் ஒரு அங்குலத்தைக் கூட விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றும் அவர் புதினை எச்சரித்தார். நேட்டோ படையை பற்றி புதின் தவறான பிரச்சாரம் செய்து வருவதாக கூறிய ஜோ பைடன், நேட்டோ தற்காப்பு படைதான் தாக்கும் படை அல்ல என்றார்.

மேலும் போர் தொடங்கிய 31 நாட்களில் முதன்முறையாக உக்ரைன் வெளியுறவு அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடனும் ஜோ பைடன் போலந்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். முன்னதாக உக்ரைன் அகதிகளை சந்தித்து மனம் உருகிய ஜோ பைடன் புதினை கசாப்புக் கடைக்காரர் என்று சாடினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments