நடுரோட்டில் தாயை அடித்து துன்புறுத்திய மகன்.. நீ இருப்பதால் தான் அரசு வேலை கிடைக்கவில்லை என கூறி தாக்குதல்

0 3136
நடுரோட்டில் தாயை அடித்து துன்புறுத்திய மகன்.. நீ இருப்பதால் தான் அரசு வேலை கிடைக்கவில்லை என கூறி தாக்குதல்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நடுரோட்டில் பெற்ற தாயை மகன் அடித்து துன்புறுத்தும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

புதுப்பட்டி மேற்கு காலனியை சேர்ந்த பச்சமுத்து, வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்த நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு பணியில் இருந்த போது உயிரிழந்ததார். இதனையடுத்து 2017ஆம் ஆண்டு, கருணை அடிப்படையில் இந்த பணி அவரது மனைவி சாந்திக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், இவர்களது 4ஆவது மகன் கண்ணன் திருமணம் முடிந்தும் வேலை ஏதுமின்றி சுற்றி வரும் நிலையில், அவ்வபோது சாந்தியிடம் பணம் கேட்டும், நீ உயிரோடு இருப்பதால் தான், தனக்கு அரசு வேலை கிடைக்கவில்லை என கூறியும் கொலைவெறி தாக்குதல் நடத்துவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் கண்ணன் மீது 4 முறை புகார் அளித்துள்ளதாக கூறும் சாந்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments