மாமல்லபுரம் நகர காவல்நிலையத்தில் டிஜிபி சைலேந்திர பாபு திடீர் ஆய்வு

0 1639
மாமல்லபுரம் நகர காவல்நிலையத்தில் டிஜிபி சைலேந்திர பாபு திடீர் ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் நகர காவல்நிலையத்தில் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது காவல்நிலையத்தில் பதிவாகியுள்ள வழக்குகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து கேட்டறிந்த அவர், குற்றத்தடுப்பு பணிகளில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களை பாராட்டி, அந்த காவல்நிலையத்திற்கு பரிசாக 5 ஆயிரம் ரூபாய் தொகையை வழங்கினார்.

டிஜிபி ஆய்வுக்காக வந்திருப்பதை அறிந்ததும் உடனடியாக சுற்றுவட்டார காவல்நிலையங்களில் இருந்தும் காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் மாமல்லபுரம் காவல்நிலையத்திற்கு வந்தனர்.

அவர்களிடம் பொதுமக்களிடையே கனிவாக நடந்து கொள்ள வேண் டும் என சைலேந்திரபாபு அறிவுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments