குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 12 அடி நீள ராஜ நாகத்தை லாவகமாக பிடித்த வாவா சுரேஷ்

0 2557
குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 12 அடி நீள ராஜ நாகத்தை லாவகமாக பிடித்த வாவா சுரேஷ்

கேரளாவில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சுமார் 12 அடி நீளமுள்ள ராஜ நாகத்தை, வாவா சுரேஷ் லாவகமாக பிடித்த வீடியோ வைரலாகி வருகிறது.

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த வாவா சுரேஷ், பாம்புகளை பிடிப்பதில் கைதேர்ந்தவர். கடந்த ஜனவரி மாதம், சங்கனாச்சேரி பகுதியில் பாம்பு பிடித்த போது இவரை நாகப்பாம்பு தீண்டியது. தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்த அவர், ஒரு மாதம் கழித்து மீண்டும் பாம்புப் பிடிக்கத் தொடங்கினார். இந்நிலையில், பத்தினம்திட்டாவில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ராஜநாகத்தை வா-வா சுரேஷ் லாவகமாக பிடித்து சாக்குப்பையில் போட்டு எடுத்து சென்ற வீடியோ வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments