’’ப்பா என்னா வெயிலு பா’’.. குழந்தை போல தொட்டிக்குள் படுத்து உருண்டு உற்சாக குளியல் போடும் யானை..!

0 3754

கோடைக்காலம் துவங்கிவிட்ட நிலையில் திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான லட்சுமி என்ற யானை, மலையடிவாரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டியில் ஷவரில் ஆனந்த குளியலாடி வருவது பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

தண்ணீர் தொட்டிக்குள் படுத்து உருண்டு ஒரு குழந்தை போல அந்த யானை உற்சாகமாக குளியலிட்டது.

அத்துடன் மலைக்கோட்டை கோவிலில் தும்பிக்கை மூலம் அற்புதமாக மவுத் ஆர்கன் வாசித்தும் அந்த யானை அங்கு வரும் பக்தர்களை ஈர்த்து வருகிறது. யானை மவுத் ஆர்கன் வாசிப்பதை பலரும் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments