கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு... பெண் மருத்துவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை

0 3242

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில், எலக்ட்ரோபதி பெண் மருத்துவர் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படும் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

நவதி கிராமத்தை சேர்ந்த முனியப்பாவிற்கு 6 ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில், முதல் மனைவியை பிரிந்ததாக கூறி எலக்ட்ரோபதி பெண் மருத்துவரான 24 வயது பெண் நந்தினியை, 1.5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 2வது திருமணம் குறித்து முனியப்பாவின் முதல் மனைவிக்கு தெரிந்ததால் முனியப்பா- நந்தினி இடையே அவ்வபோது தகராறு ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதில், மனமுடைந்த நந்தினி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், முனியப்பாவை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments