ஊர்தி வரத் தாமதமானதால் மருத்துவமனையில் உயிரிழந்த மகளை தோளில் சுமந்து கொண்டு சென்ற தந்தை

0 2768

சத்தீஸ்கரின் சுர்குஜா மாவட்டத்தில் மருத்துவமனையில் உயிரிழந்த மகளின் உடலைக் கொண்டு செல்ல ஊர்தி வராததால், தந்தையே தோளில் சுமந்து கொண்டு சென்ற காட்சி சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

லக்கன்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பயனின்றி மகள் உயிரிழந்தார். உடலைச் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல உடனடியாக ஊர்தி வராததால் தந்தையே தோளில் போட்டுச் சுமந்து சென்றார்.

சமூக வலைத்தளங்களில் இந்தக் காட்சி பரவியதால் இது குறித்து விசாரிக்க மாநில நலவாழ்வுத் துறை அமைச்சர் டி.எஸ்.சிங்தேவ் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வட்டார மருத்துவ அலுவலரைப் பணியிட மாற்றம் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

 

Surguja: Chhattisgarh Health Min TS Singh Deo orders probe after video of a man carrying body of his daughter on his shoulders went viral

Concerned health official from Lakhanpur should have made the father understand to wait for hearse instead of letting him go, Deo said(25.3) pic.twitter.com/aN5li1PsCm

— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) March 26, 2022 ">

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments