பொது வெளியில் வைத்து வீட்டு புரோக்கர் காரில் கடத்தல்: துரத்திச் சென்று போலீசார் மீட்பு - இருவர் கைது

0 1975

சென்னையில் வீட்டு புரோக்கர் காரில் கடத்தப்பட்டதாக கிடைத்த புகாரில் சில மணி நேரங்களில் நபரை மீட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

தியாகராய நகரை சேர்ந்த ரவி, பலருக்கு வீடு குத்தகைக்கு எடுத்துத் தருவதாக கூறி பணம் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. பணம் ஏமாந்தவர்கள், பொதுவெளியில் வைத்து ரவியை காரில் கடத்தியதாகவும், சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அளித்த புகாரில், ரோந்தில் ஈடுபட்ட போலீசார் மூலம் அம்பத்தூர் அடுத்த கள்ளிக்குப்பத்தில் ரவியை மீட்டதாகத் தெரிவித்தனர்.

இருவரை கைது செய்தும் தப்பியோடியவர்களை தேடி வருவதாகவும் போலீசார் கூறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments