சென்னையில் காய்கறி வியாபாரியை உறவினர்களுடன் சேர்ந்து அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற 3 பெண்கள் உட்பட 5 பேர் கைது.!

0 3195

சென்னையில் எதிர்விட்டு கழிவுநீர் வாசலுக்கு வந்ததால், காய்கறி வியாபாரியை உறவினர்களுடன் சேர்ந்து அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற 3 பெண்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மயிலாப்பூர் அப்பாதுரை கார்டன் கன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஏழுமலை என்பவரை 2 தினங்களுக்கு முன்பு இவரை 5 பேர் கொண்ட கும்பல் வெட்டிவிட்டு தப்பியோடி விட்டது. அந்த கும்பல் காய்கறி வாங்குவதைப் போல நடித்து ஏழுமலையை சுற்றிவளைத்து மறைத்து வைத்திருந்த கத்தியால் வெட்டும் சிசிடிவி வெளியாகி இருந்தது.

இதுதொடர்பான புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் ஏழுமலை மற்றும் எதிர்வீட்டில் வசிக்கும் ராணி குடும்பத்தினர் இடையே கழிவுநீர் பிரச்னையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடைபெற்றிருப்பது தெரிய வந்த து.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments