ரஷ்யா குறித்து போலிச் செய்தி வெளியிட்டால் 15 ஆண்டு சிறை விதிக்கும் சட்டத்தில் கையெழுத்திட்டார் அதிபர் புதின்.!

0 1835

வெளிநாடுகளில் ரஷ்ய நடவடிக்கைகள் குறித்து போலி செய்திகளை வெளியிடுவோருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கும் சட்டத்தில் அதிபர் புதின் கையெழுத்திட்டார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை குறித்த தகவல்கள் உலகளவில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

பொய் பிரசாரம் மேற்கொள்பவர்களை கண்டிப்பதாக கூறிய ரஷ்யா, இனி ரஷ்யா மற்றும் ராணுவ நடவடிக்கைகள் குறித்து போலி செய்திகளை வெளியிட்டால் அபராதம் மற்றும் 15 ஆண்டுகள் சிறை எனத் அறிவித்தது. இது தொடர்பான மசோதாவிற்கு ரஷ்யா நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்த நிலையில் சட்டத்தில் அதிபர் புதின் கையெழுத்திட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments