இரு நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் பதவியை ராஜினாமா செய்தார் அனில் அம்பானி

0 3890

ரிலையன்ஸ் பவர் மற்றும் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்டிரக்சர் நிறுவனங்களின் இயக்குனர் பதவியை அனில் அம்பானி ராஜினாமா செய்தார்.

இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி, ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவன மோசடிப் புகாரில் அனில் அம்பானி உள்பட 3 பேரை தடை செய்தது. மேலும் செபியுடன் தொடர்புடைய நபர்கள், செபியில் பதிவு செய்த, பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் இயக்குனர்கள், விளம்பரதாரர்கள் உள்ளிட்டோரை தொடர்பு கொள்ளவும் தடை விதித்தது.

இதனால் ரிலையன்ஸ் பவர்,  ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்டிரக்சர் நிறுவனங்களின் நிதி முதலீடு தடைபட்டதை அடுத்து இயக்குனர் பதவியில் இருந்து அனில் அம்பானி விலகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நிறுவனங்களுக்கும் ராகுல் சரின் என்பவர் கூடுதல் இயக்குனராக அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நியமிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments