கரும்புத் தோட்டத்தில் புகுந்த காட்டு யானைகளை டிராக்டர் மூலம் வனப்பகுதிக்குள் விரட்டி அடித்த விவசாயிகள்.!

0 1480

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தாளவாடி மலைப்பகுதியில் விவசாய தோட்டத்தில் புகுந்த காட்டு யானைகளை  டிராக்டரை பயன்படுத்தி விவசாயிகள் விரட்டி அடித்தனர். 

நெய்தாளபுரம் கிராமத்திற்குள் நேற்றிரவு புகுந்த காட்டுயானைகள் அப்பகுதியில் விவசாயிகள் பயிரிட்டிருந்த கரும்பு தோட்டத்தில் புகுந்து கரும்பு பயிர்களைச் சேதப்படுத்தின.

இதனைக் கண்ட விவசாயிகள் ஒன்றிணைந்து  டார்ச் லைட்டை பயன்படுத்தி சத்தம் போட்டு காட்டு யானைகளை விரட்ட முயன்றனர். ஆனால் அவைகள் கரும்புத் தோட்டத்தை விட்டு நகராமல் நின்றதால் விவசாய பணிக்கு பயன்படுத்தப்படும் டிராக்டரை பயன்படுத்தி அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments