கீவ்வில் உள்ள கிராமத்தில் மிகப்பெரிய எண்ணெய் கிடங்கை ரஷ்ய படைகள் தாக்கி அழிப்பு.!

0 2728

உக்ரைனில் தலைநகர் கீவ்க்கு அருகே கலினிவ்கா கிராமத்தில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் கிடங்கை ரஷ்ய படைகள் தாக்கி அழித்திருப்பதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேற்று மாலையில் கடல் பகுதியில் இருந்து கப்பல் வழியாக காலிபர் ஏவுகணையை ஏவி ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியதில் அந்த எண்ணெய்க் கிடங்கு அழிக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ் தெரிவித்துள்ளார்.

மத்திய உக்ரைனில் உள்ள ஆயுதப்படைகளின் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் அந்த எண்ணெய்க்கிடங்கில் இருந்தே வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments