கள்ள வாக்கைத் தடுக்க வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க அரசு பரிசீலித்து வருகிறது - அமைச்சர் கிரண் ரிஜிஜு

0 2071

கள்ள வாக்கைத் தடுக்க வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்கவும், வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஆன்லைனில் வாக்களிக்கும் வசதி செய்யவும் அரசு பரிசீலித்து வருவதாக மத்தியச் சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

மக்களவையில் பேசிய அவர், தேர்தல் முறைகேடு ஒரு தீவிரமான விஷயம் என்றும், கள்ள வாக்கைத் தடுக்கும் வழிமுறைகள் பற்றி அரசு பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்தார்.

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைப்பது கள்ள வாக்கைத் தடுக்கும் வழிகளில் ஒன்றாகும் என்றும், இதன் மூலம் ஒருவரின் பெயர் பல இடங்களில் வாக்காளர் பட்டியலில் இருப்பது தடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments