நடிகை மீராமிதுனை ஏப்ரல் 4 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு

0 2741

வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்த நிலையில் நடிகை மீரா மிதுன் சென்னை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக அளிக்கப்பட்ட புகாரில், மீரா மிதுன் அவரது நண்பர் சாம் அபிஷேக் கடந்த ஆகஸ்டில் கைதான நிலையில், இருவரும் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

வழக்கில் அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, விசாரணையின்போது மீரா மிதுன் ஆஜராகாததால் ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இன்று கைதான மீரா மிதுன் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், ஏப்ரல் 4 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments