சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு.. சிறைக்கு இருவரும் காயத்துடனேயே வந்தனர் - சிறைக்காவலர் மாரிமுத்து

0 3434

ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் இருந்து கோவில்பட்டி கிளைச் சிறைக்குக் கொண்டுவரப்பட்டபோதே காயத்துடன் தான் வந்ததாகச் சிறைக் காவலர் மாரிமுத்து சாட்சியம் அளித்துள்ளார்.

தந்தை மகன் இருவரும் காவல்துறையினரின் சித்திரவதையால் உயிரிழந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கோவில்பட்டி சிறைக் காவலர் மாரிமுத்து இன்று சாட்சியம் அளித்தார். அப்போது ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் சாத்தான்குளத்தில் இருந்து கொண்டு வரப்பட்டபோதே காயம் அடைந்திருந்ததாகத் தெரிவித்தார். பென்னிக்ஸைச் சிறையில் இருந்து கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை ஆகியோரையும் அடையாளம் காட்டினார். அதன்பின் குற்றஞ்சாட்டப்பட்டோர் வழக்கறிஞர்களின் குறுக்கு விசாரணை நடைபெற்றது. இதையடுத்து அடுத்தகட்ட விசாரணை மார்ச் 29 ஆம் நாளுக்குத் தள்ளி வைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments