காவல்துறை முன்பு ஆஜராக, நடிகர் எஸ்.வி.சேகருக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

0 1933

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் இழிவாக பதிவிட்டதாக தொடரப்பட்ட  வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகர் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை முன்பு விசாரணைக்கு ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

மனு மீதான விசாரணையில், வேறொருவரின் கருத்தையே தாம் பகிர்ந்ததாகவும் அதற்காக உடனடியாக மன்னிப்பு கேட்டதாகவும் எஸ்.வி.சேகர் தரப்பில் தெரிவிக்கப்பட்து.

இந்த விவகாரம் தொடர்பாக ஒரு முறைமுறை கூட எஸ்.வி.சேகர் விசாரணைக்காக ஆஜராகவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து ஏப்ரல் 2ம் தேதி மத்திய குற்றப்பிரிவு காவல்துறை முன் விசாரணைக்கு ஆஜராக எஸ்.வி சேகருக்கு உத்தரவிட்டப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments