ராம்பூர்ஹட்டில் 8 பேரை எரித்துக் கொன்ற வழக்கு.. சிபிஐ விசாரிக்கக் கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு

0 1291

மேற்கு வங்கத்தின் பீர்பூம் மாவட்டத்தில் வீடுகளைத் தீ வைத்து கொளுத்தி, 8 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்கவும், இருவாரங்களில் நிலை அறிக்கை அளிக்கவும் கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராம்பூர்ஹட் என்னும் ஊரில் வன்முறையில் ஒரு கும்பல் குடிசை வீடுகளைத் தீவைத்துக் கொளுத்தியதில் 8 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கை மாநிலக் காவல்துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐ எடுத்துக் கொள்ளவும் விரைவாகப் புலனாய்வு செய்யவும் கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கின் நிலை அறிக்கையை ஏப்ரல் 7ஆம் நாள் நீதிமன்றத்தில் வழங்கவும் சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments