கணவனை கொல்ல கூலிக்கு ஆள் வைத்த காதல் பெண் வண்டு..! காதலனுக்கு போலீஸ் வலை..!

0 3273
கணவனை கொல்ல கூலிக்கு ஆள் வைத்த காதல் பெண் வண்டு..! காதலனுக்கு போலீஸ் வலை..!

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே கணவனை கொலை செய்ய காதலனுடன் சேர்ந்து கூலிக்கு ஆளை அனுப்பிய மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலை சண்முகா நகரைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி கிருத்திகா இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். நடராஜன் வட்டிக்கு பணம் கொடுக்கும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.

வியாழகிழமை காலை கிருத்திகா பரமத்தியில் உள்ள கடை ஒன்றுக்கு சென்று வருவதாக கணவர் நடராஜனிடம் கூறிவிட்டு வெளியில் சென்று விட்டார் . வீட்டில் நடராஜன் மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் திடீரென அரிவாளால் நடராஜனின் கழுத்து கை கால் ஆகிய பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் செய்வதறியாது திகைத்த நடராஜன் கூச்சலிட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

நடராஜனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது நடராஜன் ரத்தவெள்ளத்தில் கிடந்ததும் அங்கிருந்து ஒரு நபர் தப்பி ஓடுவதும் தெரியவந்தது. அவனை விரட்டிச்சென்ற அப்பகுதி மக்கள் சுற்றிவளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்து பரமத்திவேலூர் காவல் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த நடராஜனை மீட்டு பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு நடராஜனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாமக்கல் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

கொலை வெறித்தாக்குதல் நடத்தியவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் நடராஜனின் மனைவி கிருத்திகாவின் காதல் சடுகுடு அம்பலமானது. கிருத்திகாவுக்கும், கொந்தலம் கிராமத்தை சேர்ந்த கோபால் என்பவருக்கும் திருமணத்துக்கு பிந்தைய காதல் உருவாகி அது தவறான தொடர்பாக மாறி உள்ளது.

இருவரும் நெருங்கிப் பழகி வந்ததை அறிந்த கணவர் நடராஜன் , தனது மனைவியை கண்டித்ததால் பலமுறை அவர்களுக்கு இடையே வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது. தங்கள் காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவர் நடராஜனை தீர்த்துக் கட்ட முடிவெடுத்த கிருத்திகா , காதலன் கோபாலுடன் சேர்ந்து தனியார் உணவு விடுதி ஒன்றில் வேலைபார்த்து வந்த யோகேஸ்வரனை கூலிக்கு அமர்த்தி நடராஜனை தீர்த்துக்கட்ட சதி திட்டம் தீட்டியுள்ளனர்.

திட்டமிட்டபடி சம்பவத்துக்கு முன்னதாக வீட்டை விட்டு வெளியேறிய கிருத்திகா வீட்டில் கணவர் நடராஜன் தனியாக இருக்கும் தகவலை காதலன் கோபாலிடம் தெரிவித்துள்ளார். அவர் சிக்னல் கொடுத்ததும் யோகேஸ்வரன் அரிவாளுடன் வீடு புகுந்து நடராஜனை சரமாரியாக வெட்டியதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

கணவனை கொலை செய்ய கூலிக்கு ஆள் அனுப்பி விட்டு அப்பாவி போல நாடகமாடிய காதல் போராளி கிருத்திகாவை கைது செய்த போலீசார் தலைமறைவான கோபாலை தேடி வருகின்றனர்.

திருமணத்துக்கு பின்னர் தன் இணையர் மீது தான் காதல் வர வேண்டுமே தவிர கண்டவர் மீது காதல் வந்தால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி..!

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments