பிர்பும் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தார் மம்தா பானர்ஜி.. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ 5லட்சம் காசோலை..

0 1284
மேற்கு வங்கத்தில் பிர்பும் மாவட்டத்தில் குழந்தைகள் ,பெண்கள் உள்ளிட்டோர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவ இடத்துக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் அளித்தார்.

மேற்கு வங்கத்தில் பிர்பும் மாவட்டத்தில் குழந்தைகள் ,பெண்கள் உள்ளிட்டோர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவ இடத்துக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் அளித்தார்.

பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் 5 லட்சம் ரூபாய் நிவாரணத்துக்கான காசோலையை அவர் வழங்கினார். எரிக்கப்பட்ட வீடுகளைக் கட்டுவதற்கு 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் மமதா பானர்ஜி அறிவித்தார்.

ஆளும் கட்சி பிரமுகர் பாது சேக் என்பவரின் படுகொலையைக் கண்டித்து வெடித்த வன்முறையில் பல வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இச்சம்பவத்தையடுத்து மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் பாஜக வலியுறுத்தி வருகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments