கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு

0 4411

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மேடையேறி சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் சார்பில் மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து சிதம்பரம் ஆர்டிஓ ரவி உத்தரவிட்டுள்ளார்.

கோயில் நிர்வாகத்தை எதிர்த்து தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில், இதுகுறித்து இறுதி முடிவு எடுக்க தமிழக அரசின் சட்ட வல்லுநர்கள் குழு ஆலோசித்து வருகிறது.

இந்நிலையில், அரசின் முடிவை எதிர்நோக்கி இருக்கும் சூழலில் ஒரு மாதத்திற்கு சிதம்பரம் நடராஜர் கோவில் சம்பந்தமாக அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் போராட்டம் நடத்த 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments