தடுப்பூசியால் பள்ளி மாணவிகள் இருவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதா? அமைச்சர் விளக்கம்

0 1458

தடுப்பூசியால் பள்ளி மாணவியர் இருவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதா? என்று டெல்லியில் மருத்துவக்குழு ஆராய்ந்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை 

மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் இருவருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட பின் ஏற்பட்ட உடல்நல பாதிப்பு தொடர்பாக சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

இரு மாணவியருக்கும் சென்னையில் உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். இரு மாணவியரும் தடுப்பூசியால் பாதிக்கப்படவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தாலும், டெல்லிக்கு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments