உக்ரைன் போரில் ரஷ்யா பாஸ்பரஸ் குண்டுகளைப் பயன்படுத்துவதாக அதிபர் செலன்ஸ்கி குற்றச்சாட்டு

0 1929

உக்ரைன் போரில் ரஷ்யா பாஸ்பரஸ் குண்டுகளைப் பயன்படுத்துவதாக அதிபர் செலன்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.

வெண் பாஸ்பரஸ் குண்டுகள் வெடித்துத் தீப்பற்றி எரியும்போது 800 டிகிரி செல்சியசுக்கு மேல் வெப்பநிலை உருவாகும் என்பதால் மனிதர்களுக்கு அதிகத் தீங்கு விளைவிக்கும். இவ்வகைக் குண்டுகளைப் போரில் பயன்படுத்துவது குற்றம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உக்ரைனில் போபஸ்னா நகரின் மீது ரஷ்ய ராணுவம் பாஸ்பரஸ் குண்டுகளை வீசி வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தியதாக மனித உரிமை அமைப்பு குற்றஞ்சாட்டியது. இதே குற்றச்சாட்டை அதிபர் செலன்ஸ்கியும் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments