அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை முழுமையாக முடிக்க ரூ.1,902 கோடி ஒதுக்கீடு

0 1279

அத்திக்கடவு - அவினாசி திட்டப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், அத்திட்டத்தை முழுமையாக முடிக்க பட்ஜெட்டில் ஆயிரத்து 902 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இது குறித்து பேசிய அவர், கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக விரிவான திட்ட அறிக்கை தயார் நிலையில் உள்ளதோடு, மக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட உள்ளதாக கூறினார்.

மேலும், மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாகவும் பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments