இலங்கை தமிழர்களை சட்டரீதியாக கையாள்வது குறித்து மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம் - முதலமைச்சர்

0 1603

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் அங்குள்ள தமிழர்கள் தமிழகம் நோக்கி படையெடுக்கும் நிலையில், அவர்களை சட்ட ரீதியாக கையாள்வது குறித்து மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய அவர், இலங்கை தமிழர்கள் பல இன்னல்களுக்கு ஆளாகியிருப்பதாகவும், அவர்களுக்கு விரைவில் அடைக்கலம் கொடுப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறினார்.

மேலும், இந்தியாவில் தமிழ்நாடு தான் முதன்மை மாநிலமாக இருக்க வேண்டும் என நினைத்து பணியாற்றி வருவதாகவும், அதற்கு தமது துபாய் பயணம் நிச்சயம் வழிவகுக்கும் எனவும் முதலமைச்சர் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments