அக்கம் பக்கத்து வீட்டு சண்டையால் கொம்பால் நாயை கொடூரமாக தாக்கி அடித்துக் கொன்ற நபர்.!

0 2106

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் அக்கம் பக்கத்து வீட்டு சண்டைக்காக நபர் ஒருவர் நாயை கொடூரமாக கொம்பால் அடித்துக் கொன்ற வீடியோ வெளியாகியுள்ளது.

அத்திப்பாடி கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான நீப்பத்துறை காப்புக்காடு பகுதியில் வசித்து வரும் சிவக்குமார் - புவனேஷ்வரி தம்பதி, தங்களது வீட்டை ஒட்டி கொட்டகை அமைக்க முடிவு செய்துள்ளனர்.

கொட்டகை அமைத்தால், மழைதண்ணீர் தனது வீடு இருக்கும் பகுதிக்கு வந்து பாதிப்பு ஏற்படும் என அவர்களது பக்கத்து வீட்டுக்காரரான காசிநாதன் சண்டையிட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், சம்பவத்தன்று சிவக்குமார் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், வீட்டில் இருந்த புவனேஷ்வரிக்கும், காசிநாதனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

ஆத்திரமடைந்த காசிநாதன் புவனேஷ்வரியை அடிக்க முடியாத குத்தத்திற்கு, அவர் செல்லமாக வளர்த்து வந்த வளர்ப்பு நாயை கொம்பை வைத்து கொடூரமாக தாக்கி கொன்றார்.

நாயை அடித்துக் கொன்ற காசிநாதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிங்காரப்பேட்டை காவல்நிலையத்தில் புவனேஷ்வரி புகாரளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments