ரூ.100 டிப்ஸ் பணத்துக்காக சக ஊழியரை கொன்ற நபர் கைது

0 1380

சென்னை அடுத்த திருவேற்காட்டில் டாஸ்மாக் பாரில் நபர் ஒருவர் கொடுத்த டிப்ஸ் பணத்தை பிரிப்பதில் பார் ஊழியர்கள் இருவர் இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருவேற்காடு அடுத்த கோலடியில் உள்ள டாஸ்மாக் கடையை ஒட்டி செயல்பட்டு வரும் பாரில் மது அருந்த வந்த நபர், அங்கு வேலை செய்யும் முனிராஜ், முனிசெல்வம் ஆகிய இருவருக்கும் 100 ரூபாய்யை டிப்ஸ்ஸாக கொடுத்து பிரித்துக்கொள்ளும்படி கூறிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், டிப்ஸ் பணத்தை முழுவதும் முனிராஜ் மது வாங்க பயன்படுத்தியதாகவும், முனிசெல்வத்தின் பங்கை பிரித்து கொடுக்கவில்லை எனவும் சொல்லப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த முனிசெல்வம், போதையில் வந்த முனிராஜை தாக்கியதில் அவர் கீழே விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments