பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகம் வரும் இலங்கைத் தமிழர்களை மண்டபம் முகாமில் தங்க வைக்க தமிழக அரசு உத்தரவு.!

0 1699

இலங்கையிலிருந்து தமிழகம் வந்தவர்கள் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட உள்ளனர். பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையின் மன்னார் மற்றும் வவுனியா பகுதியில் இருந்து 16 இலங்கைத் தமிழர்கள் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதிக்கு வந்துள்ளனர்.

இவர்களை மீட்ட கடலோர காவல் படையினர் மரைன் போலீசாரிடம் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவிற்குள் நுழைந்ததாக வழக்குப் பதிவு செய்த மரைன் போலீசார், 5 பேரை ராமேஸ்வரம் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, கஜேந்திரன் என்பவரை புழல் மத்திய சிறைக்கும், மேரிகிளாரின், டியோரி ஆகியோரை புழல் பெண்கள் சிறைக்கு அனுப்பவும் உத்தரவிட்டார்.

இந்நிலையில் இலங்கையில் இருந்து தமிழகம் வருபவர்கள் அகதிகளாக பதிவு செய்யப்படுவார்கள் என தமிழக அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து இன்று சென்னை புழல் சிறைக்கு அழைத்து வரப்படும் இலங்கைத் தமிழர்கள் நாளை மண்டபம் அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments