மகாராஷ்டிராவில் எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை முயற்சி.. உயிரை துச்சமென கருதி இளைஞரை மீட்ட ரயில்வே காவலரின் சிசிடிவி காட்சி.!.!

0 2866

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் விதால்வாடி ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற இளைஞரை ரயில்வே போலீசார் சட்டென மீட்ட சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

நடைபாதையில் நின்றிருந்த இளைஞர்,நிலையத்திற்குள் ரயில் வந்ததும் தண்டவாளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதைக்கண்ட ரயில்வே காவலர் ஒருவர் தன் உயிரை துச்சமென கருதி சட்டென தண்டவாளத்தில் இறங்கி இளைஞரை பத்திரமாக மீட்டார். ரயில்வே போலீசார் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments