அரசுமுறைப் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று துபாய் பயணம்

0 1648
அரசுமுறைப் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று துபாய் பயணம்

அரசுமுறை பயணமாக இன்று துபாய் மற்றும் அபுதாபி செல்லும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு அமைச்சர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை சந்திக்கிறார்.

இன்று மாலை புறப்படும் முதலமைச்சர், துபாயில் நடைபெற்று வரும் உலக கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கினை நாளை திறந்து வைக்கிறார். இந்த அரங்கில் தொழில் துறை, மருத்துவம், சுற்றுலா, கலை, கலாச்சாரம், கைத்தறி, கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் தமிழ்நாட்டின் சிறப்பை உலகிற்கு எடுத்துக்காட்டும் வண்ணம் காட்சிப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து துபாய் மற்றும் அபுதாபியில் தமிழ்நாட்டிற்கு மேலும் முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு, பொருளாதாரம், வெளிநாட்டு வர்த்தகம் போன்ற முக்கிய துறைகளின் அமைச்சர்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசுகிறார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments