உத்தரப்பிரதேச முதலமைச்சராக இரண்டாவது முறை பதவியேற்கிறார் யோகி ஆதித்யநாத்

0 2031
உத்தரப்பிரதேச முதலமைச்சராக இரண்டாவது முறை பதவியேற்கிறார் யோகி ஆதித்யநாத்

உத்தரப்பிரதேச முதலமைச்சராக இரண்டாவது முறை நாளை பதவியேற்கிறார் யோகி ஆதித்யநாத். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்பட பலர் கலந்துக் கொள்ள உள்ளனர்.

டேராடூனில் புஷ்கர் சிங் தாமியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பின்னர் டெல்லியில் முகாமிட்டுள்ள யோகி, மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை அவர்களின் இல்லத்தில் நேரில் சென்று தமது பதவியேற்பு விழாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

தமது அமைச்சரவை குறித்தும் மூத்த பாஜக தலைவர்களுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். யோகியின் புதிய அமைச்சரவையில் 45க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் இடம் பெறுவார்கள் என்று பாஜக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments