பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக ஏவி பரிசோதித்தது இந்திய பாதுகாப்புத்துறை

0 1934

நிலத்தில் இருந்து நிலத்தில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் மேம்படுத்தப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணையை இந்திய பாதுகாப்புத்துறை  வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.

அந்தமான் நிகோபாரில் நடைபெற்ற இந்த பரிசோதனையில் மிக துல்லியமாக இலக்கை ஏவுகணை தாக்கி அழித்ததாக பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானப் படை தளபதி விஆர் சவுத்திரி இந்த பரிசோதனையை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதற்கு, அதிகாரிகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments