வாடிக்கையாளர் போல் நாடகமாடி பெண்ணிடம் செயின் பறிப்பு ; சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு

0 1629
வாடிக்கையாளர் போல் நாடகமாடி பெண்ணிடம் செயின் பறிப்பு ; சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு

கன்னியாகுமரி மாவட்டத்தில் வாடிக்கையாளர் போல் நாடகமாடி கடைக்கார பெண்மணியின் தங்கச் செயினை பறித்துச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கருங்கல் பகுதியில் உள்ள மளிகை கடைக்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், அங்கு வேலை பார்க்கும் பெண்ணின் 8 சவரன் செயினை பறித்து விட்டு, கடை வாசலில் ஆன் செய்தவாறே நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றார்.

தங்கச் செயினை பறிகொடுத்த பெண்மணி, வாகனங்கள் வருவதை கூட கவனிக்காமல், சாலையை கடந்து சென்று கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார்.

சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் ஹெல்மெட் ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments