மது போதையில் அடையாளம் தெரியாதவரை அடித்துக் கொன்று கழிவுநீர்த் தொட்டியில் வீசிய 4 பேர் கைது

0 5501
மது போதையில் அடையாளம் தெரியாதவரை அடித்துக் கொன்று கழிவுநீர்த் தொட்டியில் வீசிய 4 பேர் கைது

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப் பெருமாள் கோவிலில் மது போதையில் அடையாளம் தெரியாதவரை அடித்துக் கொன்று கழிவுநீர்த் தொட்டியில் வீசிச் சென்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெருமாள் கோவில் எதிர்ப்புறம் தனியார் தங்கும் விடுதியின் பயன்படுத்தப்படாத கழிவுநீர் தொட்டியில் இருந்து அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்றை நேற்றிரவு போலீசார் மீட்டனர். அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து, 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

சம்பவத்தன்று அந்த 4 பேரும் டாஸ்மாக் மதுபானக் கடைக்குச் சென்றதும் அங்கு மது வாங்கித் தருவதில் சக கூட்டாளி ஒருவனோடு சண்டை ஏற்பட்டதும் தெரியவந்தது. அந்தக் கோபத்தோடு சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தவர்கள் மீது அடையாளம் தெரியாத நபர் இருசக்கர வாகனத்தில் வந்து உரசியுள்ளார்.

ஏற்கனவே போதையிலும் கோபத்திலும் இருந்தவர்கள், அந்த நபரை கல்லாலேயே அடித்துக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. 4 பேரையும் கைது செய்த போலீசார், அடையாளம் தெரியாத அந்த நபர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments