மரியுபோல் நகரம் மீது சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படை : புகை சூழ்ந்த செயற்கைக்கோள் புகைப்படங்கள்

0 2189

ஷ்ய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வரும் மரியுபோல் நகரத்தில் குடியிருப்பு கட்டிடங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவை பெரிய அளவில் சேதமடைந்துள்ளன.

அதைக் காட்டும் செயற்கைக்கோள் புகைப்படங்களை மேக்சர் டெக்னாலஜிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. உக்ரைன் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் ரஷ்ய படைகள் குறிவைத்திருப்பதாக கூறியிருந்த உலோக உருக்கு ஆலை அமைந்துள்ள தளம் உட்பட பல்வேறு கட்டிடங்கள் மீதும் குண்டுகள் வீசப்பட்டதில் அவற்றிலிருந்து புகை கிளம்பியிருப்பதையும், தீ எரிந்து வருவதையும், சேதங்கள் ஏற்பட்டிருப்பதையும் அந்த புகைப்படங்களில் காணலாம்.

ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரில் ரஷ்ய படைகளின் முக்கிய குறியாக தெற்கு துறைமுக நகரமான மரியுபோல் உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments