நடப்பாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி 40,000 கோடி டாலரை எட்டியது - பிரதமர் மோடி பெருமிதம்

0 1651

இந்தியாவின் ஏற்றுமதி நடப்பு நிதியாண்டில் நாற்பதாயிரம் கோடி டாலர் என்னும் அளவை எட்டியுள்ளதற்குப் பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இந்தச் சாதனையை எட்டியதற்கு விவசாயிகள், நெசவாளர்கள், சிறுகுறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், தயாரிப்பாளர்கள், ஏற்றுமதியாளர்கள் ஆகியோருக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளார். உள்நாட்டில் பொருட்கள் தயாரித்துத் தன்னிறைவு பெறும் திட்டத்தில் இது குறிப்பிடத் தக்க மைல்கல்லாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். திட்டமிட்டுள்ளதற்கு 9 நாட்களுக்கு முன் இந்தச் சாதனை எட்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய நிதியாண்டில் 29 ஆயிரத்து 200 கோடி டாலர் மதிப்பில் இருந்த ஏற்றுமதி இந்த நிதியாண்டில் 37 விழுக்காடு அதிகரித்து 40 ஆயிரம் கோடி டாலராக உயர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments