நுழைவுத்தேர்வை எந்த ரூபத்திலும் அனுமதிக்க முடியாது - அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்

0 2086

மிழ்நாட்டில் கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வை எந்த ரூபத்திலும் அனுமதிக்க முடியாது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில், பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி எழுப்பிய கோரிக்கைக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் பொன்முடி, மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் கீழ் வரும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வை வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்த UGC அறிவிப்பு வெளியிட்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.

தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் மட்டுமே மத்திய பல்கலைக்கழகம் செயல்பட்டு வருவதை குறிப்பிட்ட அமைச்சர்,மாநிலத்தில் நுழைவுத்தேர்வு எந்த ரூபத்தில் நுழைய முயற்சித்தாலும் அதனை முதலமைச்சர் தீவிரமாக எதிர்ப்பார் என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments