பேக்கரி கடையில் தீ விபத்து.. ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்

0 1530

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பேக்கரி கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது.

எலவனாசூர்கோட்டை கடைவீதியில் உள்ள பத்மநாபன் என்பவருக்கு சொந்தமான பேக்கரி கடையில் குளிர்சாதனப் பெட்டியில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு கரும்புகை கிளம்பியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக கடையிலிருந்து வெளியேறிய நிலையில், தீப்பற்றி கடை முழுவதும் மளமளவென பரவியது. மேலும் அருகில் இருந்த இரு கடைகளுக்கும் தீப்பரவிய நிலையில் தகவலறிந்து வந்த உளுந்தூர்பேட்டை தீயணைப்புத்துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments