கொரோனா கால ஊரடங்கு கட்டுப்பாடுகளை முழுமையாக கைவிடலாம் - மத்திய அரசு

0 3285

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காகப் பேரிடர் மேலாண்மைச் சட்டப்படி பிறப்பித்திருந்த கட்டுப்பாடுகளை மத்திய உள்துறை அமைச்சகம் திரும்பப் பெற்றுள்ளது.

மாநிலத் தலைமைச் செயலாளர்கள், ஒன்றிய ஆட்சிப் பகுதிகளின் நிர்வாகிகளுக்கு மத்திய உள்துறைச் செயலர் அஜய் பல்லா கடிதத்தில் இதைத் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பில் முன்னேற்றம், தொற்றைக் கட்டுப்படுத்த அரசின் தயார்நிலை ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக் குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில் முகக் கவசம் அணிதல், கைகளைத் தூய்மையாக வைத்திருத்தல் ஆகிய கொரோனா தடுப்புக்கான அறிவுரைகள் தொடரும் எனத் தெரிவித்துள்ளார்.

நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து, தொற்று அதிகரித்தால் அதைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கை எடுப்பது பற்றி மாநில அரசுகள் பரிசீலிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments