மும்பை - நாக்பூர் இடையே 701 கி.மீ. தொலைவுக்கு 6 வழி விரைவுச் சாலை..

0 1845

நாட்டிலேயே முதன்முறையாக மும்பை - நாக்பூர் விரைவுச்சாலையில் காட்டு விலங்குகள் செல்வதற்காகப் பல இடங்களில் பசுமைப் பாலங்கள், சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிரத்தின் மும்பை - நாக்பூர் நகரங்களிடையே 701 கிலோமீட்டர் தொலைவுக்கு 6 வழி விரைவுச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

காட்டுப் பகுதிகளில் விலங்குகள் சாலையைக் கடக்க வசதியாக 9 இடங்களில் பசுமைப் பாலங்கள் எனப்படும் மேம்பாலங்களும், 17 இடங்களில் சுரங்கப் பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

நெடுஞ்சாலைகளில் காட்டு விலங்குகள் வாகனங்களில் அடிபட்டு உயிரிழப்பதைத் தடுக்க இத்தகைய வசதிகள் செய்யப்பட வேண்டும் எனச் சூழலியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத் தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments