ரசிகர்களின் கூட்டநெரிசலில் ஸ்கீரின் சேதமடைவதால் ஆந்திராவில், ஸ்கீரின் முன்பாக முள்வேலி அமைத்துள்ள திரையரங்கு நிர்வாகம்..

0 2423

பாகுபலியின் மாபெரும் வெற்றிக்கு பிறகு, எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஆர்.ஆர்.ஆர் ' திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு, ஆந்திரமாநிலம் ஸ்ரீகாகுளத்தில் உள்ள ஒரு திரையரங்கில் ஸ்கீரின் முன்பாக முள்வேலி தடுப்புகளை திரையரங்கு நிர்வாகத்தினர் அமைத்துள்ளனர். 

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 12 மொழிகளில் உலகம் முழுவதும் வருகிற 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிற இப்படத்துக்கு மாபெரும் எதிர்பார்ப்பு உள்ளதால், ஸ்ரீகாகுளத்தில் உள்ள திரையரங்கில் காட்சித்திரை முன்பாக முள்வேலி தடுப்புகளை அமைத்துள்ளனர்.

“புஸ்பா” படத்தின் போது ரசிகர்களின் கூட்டநெரிசலால், ஸ்கீரின் கிழிந்து சேதமடைந்ததால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக, திரையரங்கு உரிமையாளர்,தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments