விருதுநகரில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொடர்புடையோருக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர காவல்துறைக்கு முதலமைச்சர் உத்தரவு

0 2940
விருதுநகரில் இளம்பெண்ணை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகரில் இளம்பெண்ணை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இளம்பெண்ணிடம் அத்துமீறிய விவகாரத்தில் 4 சிறுவர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் உத்தரவின்படி வழக்கின் புலன் விசாரணை காவல் துணை  கண்காணிப்பாளர் அர்ச்சனாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

சரக காவல்துறை துணை தலைவர் பொன்னி, மதுரை மண்டல காவல்துறை தலைவர் ஆஸ்ரா கர்க் ஆகியோர் விருதுநகரில் முகாமிட்டு புலன் விசாரணையை மேற்பார்வையிட்டு வருவதாக டிஜிபி தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments