ஓய்வு பெற்ற நீதிபதியின் கார் மீது தாக்குதல் நடத்த முயன்ற கும்பல்.. பாதுகாவலர் மீது பட்டாக்கத்தியால் தாக்குதல்

0 2486
புதிதாக அமைக்கப்பட்ட காவல் ஆணையத்தின் தலைவரும், உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியுமான சி.டி.செல்வம் சென்ற கார் மீது தாக்குதல் நடத்த முயன்ற கும்பல், அவரது தனிப் பாதுகாவலரை பட்டாக்கத்தியால் தாக்கியுள்ளது.

புதிதாக அமைக்கப்பட்ட காவல் ஆணையத்தின் தலைவரும், உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியுமான சி.டி.செல்வம் சென்ற கார் மீது தாக்குதல் நடத்த முயன்ற கும்பல், அவரது தனிப் பாதுகாவலரை பட்டாக்கத்தியால் தாக்கியுள்ளது.

அசோக் பில்லர் சிக்னலில் திரும்பி வடபழனி நோக்கி வரும்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் நடுரோட்டில் காரை வழிமறித்து நிறுத்தியுள்ளனர்.

நீதிபதியின் பாதுகாவலர் சக்திவேல் காரை விட்டு கீழே இறங்கி அவர்களை அப்புறப்படுத்த முயன்ற போது மறைத்து வைத்திருந்த கத்தியால் தாக்கி விட்டு அவர்கள் தப்பியுள்ளனர். அந்த காட்சி சிசிடிவியல் பதிவாகி இருக்கிறது.

காரில் இருந்த நீதிபதி சி.டி.செல்வம் சென்னை பெருநகர காவல் ஆணையரை போனில் தொடர்பு கொண்டு நடந்தவற்றை கூறியதைத் தொடர்ந்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால், கூடுதல் ஆணையர், இணை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர்.

இதனிடையே படுகாயமடைந்த காவலர் சக்திவேலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்து அவருக்கு தலையில் 9 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கே.கே நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சி உதவியுடன் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments